Tuesday, July 26, 2011

THIRIKADUGAM - திரிகடுகம் பாடல்,

நன்றி மறப்பவன், சான்றோர் கூடிய அவையில் பொய் சொல்பவன், அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளைச் சொந்தம் கொண்டாடுபவன் -  இப்படிப்பட்ட மூவரும் தங்கள் குலத் தொடர்ச்சியை இழப்பர்.  மக்கட் பேறு இல்லாமல் போய் உலகத்தோர் பழிப்பர் இவர்களை.

நன்றிப் பயன் தூக்கா நாணிலியும், சான்றோர் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும் நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்து வாழ்வர்

(கொடும்பாடு உரைத்தல் என்றால் பொய் கூறுதல்
எச்சம் இழந்து வாழ்தல் என்றால் பிள்ளைப்பேறு இல்லாமல் வாழ்தல் என்று பொருள்)

No comments:

Post a Comment